வாக்குச்சாவடிகளுக்கு இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்
சென்னை: சென்னை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
அரசியல் கட்சிககள் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்றே கடைசி நாளாகும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு இன்று மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பணியுரியும் தேர்தல் பணியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், அவ்வாறு தேர்தெடுக்கப்படும் 20000 பணியாளர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.