For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த சென்னை மருத்துவர் கைது- குவியும் புகார்கள்!

பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த சென்னை மருத்துவர் சிவகுருநாதன் கைது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மயிலாப்பூர் மருத்துவர்

    சென்னை: சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மயிலாப்பூர் மருத்துவர் சிவகுருநாதன் (வயது 64) போலீசார் கைது செய்தனர். மருத்துவர் சிவகுருநாதன் பல பெண்களை சீரழித்ததாகவும் புகார்கள் குவிந்துள்ளன.

    சென்னை மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் வீதியில் ஆர்.எம். கிளினிக்கை நடத்தி வந்தவர் மருத்துவர் சிவகுருநாதன். இவருக்கு இரண்டு மகள்கள். இருவருமே மருத்துவர்கள்.

    Chennai doctor arrest for taking obscene video of patient

    மயிலாப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெஞ்சுவலிப்பதாக சிவகுருநாதனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் மேலாடையை கழற்ற வேண்டும் என சிவகுருநாதன் கூறியிருக்கிறார்.

    அதேநேரத்தில் செல்போன் கேமராவை ஆன் செய்தும் மேஜை மீது வைத்திருக்கிறார் சிவகுருநாதன். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், வெளியில் இருந்த கணவரிடம் சிவகுருநாதன் பற்றி கூறினார்.

    இதையடுத்து சிவகுருநாதன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகுருநாதன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்தது தெரியவந்தது.

    தற்போது சிவகுருநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலும் பல பெண்களை சீரழித்ததாக போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன.,

    English summary
    Chennai doctor was arrested by police on the charges of taking obscene video of women patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X