சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்... நாளை முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து எழும்பூர் வழியாக கோவைக்கும் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் நாளை முன்பதிவு செய்யப்படும் சிறப்பு ரயில்கள் விவரம்:
சென்னை எழும்பூர்- கோவை
சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 9-ந் தேதியன்று கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து நவம்பர் 11-ந் தேதியன்று சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
திருச்சி- சந்திரகாசி
திருச்சியில் இருந்து மேற்குவங்கத்தின் சந்திரகாசிக்கு சென்னை எழும்பூர் வழியாக நவம்பர் 8-ந் தேதி சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சந்திரகாசியில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 10-ந் தேதியன்று சென்னை எழும்பூர் வழியாக சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவில்- பாட்னா (வழி எழும்பூர்)
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக பீகாரின் பாட்னாவுக்கு நவம்பர் 9-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பாட்னாவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூர் வழியாக நவம்பர் 12-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல்
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு திண்டுக்கல், நாமக்கல், சேலம் வழியாக சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நவ 7-ந் தேதியன்று இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 8-ந் தேதியன்று மறுமார்க்கத்தில் இதே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.