For Daily Alerts
Just In
தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிப்பு
தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
Recommended Video
சென்னையில் காவலர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு- வீடியோ
சென்னை: தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை சக காவலர்கள் மீட்டனர்.
தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மெரினா காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் காவலர்கள் மீது பதியப்பட்ட 7 வழக்குகளில் 5 வழக்குகளை காவல்துறை ரத்து செய்துள்ளது.
Comments
English summary
Chennai Egmore Court gives bail to two constables. Two constables attempt for suicide for opposing transfer.