ரயில் விபத்துகளால் ஆத்திரம்.. பரங்கிமலையில் பயணிகள் போராட்டம்
ரயில்வே போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் மின்சார கம்பி தாக்கி கீழே விழுந்துள்ளனர். மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சென்னையில், ரயில்வே துறைக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் உட்பட பல பயணிகள், மக்கள் ஒன்றாக சேர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக போராடினார்கள்.
முக்கியமாக பரங்கி மலையில் ரயில் பயணிகள் அதிக அளவில் போராட்டம் செய்தனர். ரயிலில் இருந்து பயணிகள் கீழே விழுவது தொடர்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் ரயில்வே வழியில் ஓரத்தில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் செய்தனர். ஆனால் போலீசார் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.