For Quick Alerts
For Daily Alerts
Just In
மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு
மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிப்படைந்தன.
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.
கடந்த 7 மணிநேரமாக இதே நிலைமை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சென்ட்ரலில் இருந்து பழனி, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.
Comments
English summary
Chennai EMU Trains traffic suspended for Seven hours from Tuesday Night due to the EMU coaches derail near Avadi.