மோடி ஆட்சியைவிட மன்மோகன்சிங் அரசுதான் பெட்டர்: 55% சென்னைவாசிகளின் கருத்து
சென்னை: பிரதமர் மோடி ஆட்சியைவிட முந்தைய மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னைவாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இண்டியா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது. மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து டைம்ஸ் ஆப் இண்டியா நாட்டின் 8 முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.
இந்துத்துவா பாதையை நோக்கி
மோடி அரசு இந்துத்துவா சக்திகளிடம் மென்மை போக்கை கடைபிடிப்பதாக தேசிய அளவில் 32% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 56% மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ...
சென்னை நகரில் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக 63% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் 40% பேர் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக கூறியுள்ளனர்.
மன்மோகன்சிங் அரசு
சென்னை நகரில் மோடி ஆட்சியைவிட மன்மோகன்சிங் அரசு பரவாயில்லை என்று 55% பேர் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சி அந்தஸ்து
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படாதது குறித்து சென்னைவாசிகளில் 68% அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.