ரோட்டுப் பக்கம் புதுசா ஒரு கடையும் திறக்கக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க
தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்ட கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி மற்றும் ஊரக சாலைகளாக மாற்றி சண்டீகர் அரசு புதிய மதுக்கடைகளை திறந்தது.
அதிகாரம் உண்டு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உள்ளாட்சி அமைப்புக்குள்...
இதேபோல் பிற மாநிலங்களும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறந்தன. இதையடுத்து தமிழக அரசும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புக்குள் கொண்டு 800 புதிய டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
டாஸ்மாக் கடை திறப்பு
அந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரம் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறுகையில் உச்சநீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்து கொண்டு மாநில அரசு டாஸ்மாக் திறக்கிறது என்று கூறினார்.
புதிய கடைகளுக்கு தடை
இதையடுத்து தமிழக அரசு முன்வைத்த வாதத்தில் , உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற பதில் வரும் வரை புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்.