ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100-ஆவது நாளின்போது மக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் இந்த 13 பேருக்கு இழப்பீடு கோரி ஹைகோர்ட் மதுரை கிளையில் விஜய் நிவாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஸ்டெர்லைட் ஆலை மொத்தமாக ரூ.750 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பயன்படுத்தப்படும் என்று கோரியிருந்தார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு ரூ.10 கோடி வழங்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள், வேதாந்தா குழுமம் 2 வாரங்களில் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளார்,