மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டாஸ் பாயும்... ஹைகோர்ட் உத்தரவு
மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாபு என்பவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேடியம்மாள் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் கடத்தல் விவகாரத்தில் சட்டத்தை மீறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல்காரர்களை இது வரை குண்டாஸில் கைது செய்யாதது ஏன்.
அதிகாரிகளின் துணையின்றி மணல் கடத்தல் சாத்தியம் இல்லாததால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் மீது துறை ரீதியாக தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.