For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 'கறார்' உத்தரவு

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் திறக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாலும், சமூக பாதிப்புகள் ஏற்படுவதாலும் அந்தக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவினால் தமிழக அரசுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும் என்பதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது.

Chennai HC orders TN should not open Tasmac shops

எனினும் வருவாய்க்காக உயிர்களை பலியிடுவதா என்று கேட்ட நீதிபதிகள் வருவாயை பெருக்க மாற்று வழியை தேடிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடின.

இதனால் ஊருக்குள் கடையை திறக்க இடம் தேடியபோது பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை 25-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி திறக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவி்க்கையில், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைத்தாலும் மறுஉத்தரவு வரும் வரை மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 3 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

English summary
Chennai High court orders that the Tamil Nadu govt should not open the TASMAC shop for 3 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X