2016-இல் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றிவேல் பெற்ற வெற்றி செல்லும்- ஹைகோர்ட்
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரம்பூரில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரம்பூரில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த வெற்றியை எதிர்த்து தொடுத்த வழக்கையும் நிராகரித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்.ஆர். தனபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரர்ந்தார்.
மேலும் பணம் , அதிகார பலத்தை வைத்து பெற்ற வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் தனபாலனின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2016-இல் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றிவேல் பெற்ற பெற்றி செல்லும் என்றும் அறிவித்தது.
அதிமுகவின் கொறடாவுக்கு எதிராக செயல்பட்டதாக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் வெற்றிவேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.