ஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை மாங்காட்டில் 7 வயது கூட முழுமையாக நிரம்பாத சிறுமி ஹாசினியை தஷ்வந்த் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தி இருக்கிறான். மேலும் குழந்தையை கொலை செய்து எரித்தும் இருக்கிறான். போலீசால் சிறைபிடிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் பெற்ற தாய் சரளாவையும் கொலை செய்தான்.
அதன்பின் கடைசியாக மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டான். ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது.
5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார்.இதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதுஇல்லாமல் இரண்டு பிரிவுகளின் கீழ் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தான். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதன்படி தற்போது செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.