சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Recommended Video
சென்னை: சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த புகார் தொடர்பாக சிபிஐ சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகளை பதிவு செய்தது.
ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ளது.
சேகர் ரெட்டியின் நண்பர்கள் மீதான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேகர் ரெட்டி மீதான ரூ.8 கோடி மற்றும் 1.6 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
24 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் மட்டுமே சேகர் ரெட்டி மீது தற்போது நிலுவையில் உள்ளது.