For Daily Alerts
Just In
தமிழக பஸ்கள் தரத்தை உயர்த்த ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்
சென்னை: விளம்பரத்திற்காக பொது நல வழக்கு தொடர்ந்ததாக ஒருவருக்கு, ரூ.10,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் சீட் பெல்ட், சொகுசு இருக்கை போன்ற வசதிகள் செய்து கொடுத்து, பஸ்களின் தரத்தை, உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், பழைய பஸ்களுக்கு, பதிலாக புதிய பஸ்கள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்தனர்.
இந்த வழக்கு முற்றிலும் விளம்பரத்துக்காக தொடரப்பட்டது என மனுதாரரை கண்டித்த நீதிபதிகள், ஜவஹர்லால் சண்முகத்துக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
Comments
English summary
Chennai High court impose fine on a PIL petitioner as it obsereved as publicity stund.
Story first published: Monday, August 27, 2018, 17:01 [IST]