For Daily Alerts
Just In
சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு
சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்ட விரோதமாக 34 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு உள்ளது.
அமலாக்க துறை தன் மீது பதிவு செய்து இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு செய்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ் ரமேஷ் வழக்கு விசாரணையில் இருந்து பின்வாங்கி உள்ளார். மேலும் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
Comments
English summary
Chennai High Court Judge denied to inquire the case of Sekar Reddy. High Court Judge MS Ramesh writes the letter to Chief Justice to change the new judge.
Story first published: Friday, November 24, 2017, 20:45 [IST]