வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி வழக்கறிஞர்களை களைவது பற்றி வழக்கறிஞர் கங்கங்கள் கருத்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் அறவுரை வழங்கியுள்ளது.
அடையாள அட்டை இல்லாத வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் அடையாள அட்டை பெற்று மனுத்தாக்கலுடன் இணைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 2ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த உத்தரவை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. போலி வழக்கறிஞர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.