காலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி
காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
படத்தின் பெயரை கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். மும்பையை மையமாக வைத்து கதையை ஏற்கனவே எழுதி வைத்து இருக்கிறேன், அதனடிப்படையில்தான் காலா படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜசேகரன் மனுதாக்கல் செய்து இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்தின் கதை திருடப்பட்டதற்கு எந்த விதமான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் காலா படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.