For Daily Alerts
Just In
டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு
Recommended Video
தலைமறைவான வெற்றிவேல் முன் ஜாமீனுக்கு முயற்சி- வீடியோ
சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் போலீசாரின் அனுமதியை மீறி தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக தினகரனின் ஆதரவாளர்கள் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவில் உள்ள தினகரனின் ஆதரவாளர்கள் பலர் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் மீது வழக்குப்பபதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
ttv dinakaran vetrivel thanga tamilselvan டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வழக்குப்பதிவு தங்க தமிழ்ச்செல்வன் வெற்றிவேல்
English summary
Chennai Kottai Police filed case against TTV Dinakaran supporters Vettrivel and Thanga tamilselvan.
Story first published: Friday, March 2, 2018, 8:37 [IST]