17 காமக்கொடூரர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது: சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சங்கம் அதிரடி
Recommended Video
சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த 17 பாலியல் குற்றவாளிகளுக்காக வக்கீல்கள் ஆஜராக கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11 வயது சிறுமி 15 பேரால் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க ஊசி போதை ஊசி போட்டும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலமானது.
இதில் கைது செய்யப்பட்ட 17 பேரை இன்று ஹைகோர்ட் வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி மஞ்சுளா இவர்கள் 17 பேருக்கும் 31ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்தார்.
இந்த நிலையில், குற்றவாளிகளை ஜெயிலுக்கு அழைத்து செல்ல போலீசார் முற்பட்டபோது கோர்ட் வளாகத்திலேயே சரமாரியாக வக்கீல்கள் அந்த 17 பேரையும் தாக்கினர்.
இந்த பதற்றம் ஒருபக்கம் என்றால், இவ்வழக்கில், 17 பேருக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதை மீறி, 17 பேருக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கைவிடுத்தார்.