காதலன் தற்கொலை... சீரியல் நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு!
சீரியல் நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சீரியல் நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது காதலனான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை காலை உயிரிழந்தார்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து நிலானியும் காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கோரிக்கை
இதனால் அதிர்ச்சியடைந்த நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். காந்தி லலித் குமாரின் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்ற அவர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நிலானி தற்கொலை முயற்சி
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நிலானி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீஸ் வழக்குப்பதிவு
மருத்துவமனையில் நிலானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை நிலானி மீது சென்னை மதுரவாயல் போலீசார் தற்கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.