For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினா போராட்ட குழு கெடு முடிந்தது... இனி ஆளுநர் மாளிகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை?

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். சென்னை மெரினாவில் ஒரு லட்சத்துக்கும அதிகமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் மூன்றாவது நாளாக இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Chennai Marina protesters gave deadline to government on Jallikattu!!

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய அரசை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்துவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என மெரினா போராட்டக்குழு அறிவித்திருந்தது.

அவசர சட்டம் இயற்றாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடையும் என்றும் போராட்டக்குழுவினர் எச்சரித்திருந்தனர். போராட்டகுழுவினர் விதித்த கெடு முடிந்துள்ள நிலையில், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு அலுவலகங்ளை முற்றுகையிட போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Chennai Marina protesters deadline for Jallikattu emergency ordinance is ends. They may blockaded the Raj bhavan and central government office in Chennai sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X