குளிக்கக் கூட தண்ணீர் இல்லை... காலி வாளிகளுடன் போராட்டத்தில் குதித்த வருங்கால டாக்டர்கள்!
விடுதியில் குளிப்பதற்குகூட தண்ணீர் இல்லை என்று கூறி சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலி பக்கெட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: விடுதியில் குளிப்பதற்குகூட தண்ணீர் இல்லாததால் ஆத்திரமடை்நத சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலி பக்கெட்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதாலும், இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டதாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் குடிநீர் ஆதாரங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன.
மக்கள் தண்ணீருக்காக தவியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 3 நாள்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் குளிக்கக் கூட தண்ணீர் இல்லை எனக் கூறி காலி பக்கெட்டுகளுடன் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முன்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.