For Daily Alerts
Just In
சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் பெயர் அருண் செல்வன் என்பதாகும். வந்தவாசியை சேர்ந்த இவர் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மாணவரின் அறை திறக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்த மாணவர்கள் அறையை உடைத்தனர்.
அப்போது அருண் செல்வன் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடத்தார். மாணவரின் தற்கொலை சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலால் மாணவர் அருண் செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
In a tragic incident on Monday, Arun Selvan, a second year student of a Chennai medical college allegedly committed suicide.
Story first published: Monday, October 30, 2017, 10:37 [IST]