தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: வானிலை மையம் வார்னிங்
கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கடந்த 4 நாட்களாக வெளுத்து வருகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நான்காவது நாளாக கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கோவையில் கனமழை
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் அதிகளவாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை 10 செமீ
நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.