For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது தமிழகத்திலும் மழை பெய்து வந்தது. அது போல் வெப்பசலனம் ஏற்பட்ட போதிலும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்தாலும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.

வெதர்மேன்

வெதர்மேன்

இந்நிலையில் நேற்று காலை சென்னையில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்றைய திடீர் மழை வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

[தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.. 20க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம்]

புதுவையில்

புதுவையில்

இன்று காலை முதல் வெயில் வருவதும் மேகமூட்டமாவதுமாக இருந்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.

20-இல் தென்மேற்கு பருவமழை முடிவு

20-இல் தென்மேற்கு பருவமழை முடிவு

தற்போது வெப்பசலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் 20-ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விடை பெறுகிறது.

டிசம்பர் வரை

டிசம்பர் வரை

இதைத் தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் முடிய இருக்கும். இந்தாண்டு வடபருவமழை இயல்பை விட 12% அதிகம் பெய்யும் என்று கூறியுள்ளது.

English summary
Chennai Meteorological department announces that North east monsoon will start by this month and lasts upto December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X