வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்?
Recommended Video
சென்னை: வேலூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
வேலூரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. ஆம்பூரில் கானாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.
வேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு! - வீடியோ
2 நாட்களுக்கு
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
13 மாவட்டங்கள்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, அரியலூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை வானிலை மையம்
வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ. பதிவாகியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு காலை, இரவில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு...
இன்று பள்ளிகள் வழக்கம் போல் விடுமுறை என்பதால் பெரும்பாலும் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. சாதாரண நாட்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலையில் நாளையும் மழை பெய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது எப்படி என கவலையில் உள்ளனர்.