தீபாவளி ஸ்பெஷல்... சென்னையில் மெட்ரோ ரயில்கள் கூடுதல் நேரம் இயங்கும்!
சென்னையில் வரும் 16, 17 தேதிகளில் தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தீபாவளி அன்றும் அதற்கு முதல் நாளும் ஏற்படும் கூட்ட நெரிசலையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் பொருட்டு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயிலானது வரும் 16 மற்றும் 17 தேதிகளில் கூடுதல் நேரம் இயங்கும் என் கூறியுள்ளது.
இந்த சிறப்பு அறிவிப்பின்படி மெட்ரோ ரயிலானது " இந்த மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். அதேபோல் 19 மற்றும் 20 தேதிகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்'' சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை நாட்களில் ஏற்படும் உச்சகட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.