3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை.. சென்னையில் நிலம் எடுக்க ஆய்வு
சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டு கட்ட மெட்ரோ பணிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் அண்ணா சாலை பகுதிகளில்மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. சாலைக்கு அடியில் மெட்ரோ பணிகள் நடப்பதால் அந்த பகுதியில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், அண்ணா சாலை பகுதியில் மழை காரணமாக அவ்வப்போது சாலையில் பெரிய திடீர் பள்ளம் ஏற்படுவதும் நடப்பதுண்டு. இந்த நிலையில் தற்போது சென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிலம் எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாதவரம் முதல் சிறுசேரி வரை 3-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடக்க உள்ளது. இதற்கான நிலம் வாங்கும் பணிகள், வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடக்க உள்ளது.
ஏற்கனவே சென்னை முழுக்க மெட்ரோ மூலம் இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது கொட்டிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயிலுக்கான நிலம் ஆய்வு செய்யப்படுகிறது.