For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை துப்பாக்கிச் சூடு: மோப்பநாய் மூலம் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் நகைக்கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேடவாக்கத்தில் நகை கடை நடத்தி வருபவர் சுனில்லால். புதன்கிழமை இரவு 9 மணியளவில் இவரது கடைக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், சுனில்லாலிடம் தனக்கு ரூ.5 லட்சம் பணம் கொடு என்று கேட்டான்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுனில்லாலை நோக்கி சுட்டான். இதில் சுனில்லாலின் இடதுபக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் நகைக்கடையில் இருந்து ஓடி பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களின் அறையில் சென்று நின்று விட்டது.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன

English summary
Chennai Police inquired for a robbers suspect who opened fire at Pawn shop in Medavakkam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X