சென்னையில் எந்தெந்த இடத்தில் போராட்டம் நடத்தலாம்? பட்டியல் வெளியிட்டது சென்னை போலீஸ்!
சென்னையில் எந்தெந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தலாம் என்ற பட்டியலை சென்னை போலீஸ் வெளியிட்டுள்ளது.
சென்னை: எந்தெந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தலாம் என்ற பட்டியலை சென்னை போலீஸ் வெளியிட்டுள்ளது.
சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களின் பட்டியலை போலீஸ் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போராட்ட இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ஆட்சியர் அலுவலகம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து போராட்டம் நடத்தும் இடங்களை போலீசார் அறிவித்துள்ளனர். அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தை தவிர மற்ற இடங்களில் போராட்டங்கள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.