For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி!

காதலியை ஏமாற்ற முயன்ற இளைஞனுக்கு திடீர் திருமணம் நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: "பொண்ணை ஏமாத்தி அனுபவிச்சிட்டு.. எங்கே ஓட பார்க்கிறே" என்று வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற காதலனை இழுத்து பிடித்து வந்து கல்யாணம் செய்து வைத்துள்ளனர் போலீசார்!!

சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா.. அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்... 4 வருட காதலர்கள் இவர்கள்.

chennai police married a man who cheated his lover

திடீரென இருவருக்கும் தகராறு வந்துவிட்டது.. பிரச்சனை செய்தது வெங்கடேஷ்தான்.. அதனால் கவிதாவை விட்டு விலகி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த வனிதா வெங்கடேசன் மீது சங்கர் நகர் போலீசில் புகார் தந்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.. உடனடியாக வெங்கடேஷை மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது வெங்கடேஷ் சொல்லும்போது, :"கவிதா அழகாக இல்லை.. எப்படி கல்யாணம் செய்துக்கிறது.. அதனாலதான் அவளை விட்டு பிரிந்து போய்ட்டேன்" என்றார்.

ஆனால் உண்மையிலேயே பலமுறை இப்படித்தான் வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.. அதனால் 3 முறை கவிதா தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார்... இதனால், இப்போது விட்டால் வெங்கடேசன் திரும்பவும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார் என்பதால், போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்.

ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கி இருவருக்கும் ஸ்டேஷனிலேயே கல்யாணம் செய்து வைத்துவிட முடிவு செய்தனர்... காதலர்களுக்கு மாலை மாற்றி தாலி கட்டி கல்யாணம் நடந்தது.. பிறகு இருவரிடமும் புகாரை திரும்ப பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு. புதுமண தம்பதிகளை போலீசார் வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

English summary
chennai police married a man who cheated his girl friend after 4 years love
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X