சென்னை பொதுமக்களுக்கு இடையூறு.. ராமதாஸ், அன்புமணி மீது போலீஸ் வழக்குப்பதிவு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ராமதாஸ், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாமக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாமக சார்பில், சென்னையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து இரவு பத்து மணிக்கு மேல் கூடுதல் நேரம் கூட்டம் நடத்தி சென்னை சாஸ்திரி பவனில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், மிகவும் சத்தமாக ஒலிப்பெருக்கி வைத்ததாகவும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.