For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கண்டெய்னர் லாரி வாடகையை 20% உயர்த்தக் கோரி சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 4,000 கண்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் அது தொடர்பாக இரு தரப்பினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 20 சதவீத கட்டண உயர்வு கோரிய நிலையில் 10 சதவீத உயர்வுக்கு சி.எப்.எஸ். ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Comments
English summary
Chennai Port trust's container lorry's strike gets back.As the Ennore Port Container lorry owners demands rental amount to 20%.
Story first published: Monday, March 19, 2018, 19:27 [IST]