For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கண்டெய்னர் லாரி வாடகையை 20% உயர்த்தக் கோரி சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 4,000 கண்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

Chennai Ports Container lorrys strike gets back

இந்நிலையில் அது தொடர்பாக இரு தரப்பினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 20 சதவீத கட்டண உயர்வு கோரிய நிலையில் 10 சதவீத உயர்வுக்கு சி.எப்.எஸ். ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

English summary
Chennai Port trust's container lorry's strike gets back.As the Ennore Port Container lorry owners demands rental amount to 20%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X