For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் செவிலியர் பட்டய படிப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அடுத்த மேல் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அமுதா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு செவிலியர் பட்டய படிப்பு படித்து வந்தார். கடந்த 12 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்ற அமுதா நேற்று சென்னை திரும்பினார்.

chennai stanley medical college student sucide

கல்லூரி சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பிய அவர் மின்விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஏழு கிணறு போலீசார், அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
A second year medical college student sucide in stanley medical college
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X