சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்குமாம்
சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் அடுத்த வாரம் முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. அன்றிலிருந்து ஒரு 10 நாள்களுக்கு சென்னையில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டது. அதன்படி வானிலையும் மாறி தற்போது வெயில் கொளுத்துகிறது.
மழை பெய்தது
சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த வாரம் வங்கக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
லேசான மழை
சென்னை மழை குறித்து நார்வே வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்யும். அடுத்த வாரத்தில்தான் மழை வெளுக்கும்.
3 நாள்களுக்கு
சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்கும். திங்கள்கிழமை பெய்யத் தொடங்கும் மழை செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை வரை கொட்டித் தீர்க்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
லேசான வெயில்
நேற்றிரவு சென்னையில் மழை பெய்ததால் இன்று லேசான வெயில் தலை காட்டியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.