For Daily Alerts
Just In
தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம், மழை.. சென்னையில் கடும்போக்குவரத்து நெரிசல்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் விரைந்ததால், சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை சொந்த ஊர்களில் சென்று கொண்டாடுவதற்காக சென்னையில் பணிநிமித்தமாக தங்கியுள்ள மக்கள் பலரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன.
நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலையிலும் பலரும் பஸ்களில் சொந்த ஊர் விரைந்தனர். இதனால், கோயம்பேடு-வடபழனி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை முதல் பெய்த மழையும் டிராபிக் நெரிசலை மேலும் அதிகரித்தது. இதனால், அலுவலகங்களுக்கு சென்றவர்களும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
English summary
Chennai witnessed heavy traffic congestion due to deepavali rush.
Story first published: Saturday, November 7, 2015, 15:49 [IST]