மிரட்டும் விஷால்... உள்ளிருப்பு போராட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரும் சேரன்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதற்கு விஷால் தரப்பினர் மிரட்டுவதாக கூறி தயாரிப்பாளர் சேரன் ஆயிரம் விளக்கு போலீஸில் மனு அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: உள்ளிருப்பு போரட்டம் நடத்தி வருவதற்கு விஷால் தரப்பினர் மிரட்டுவதாக கூறி தயாரிப்பாளர் சேரன் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கு சேரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகளை எதிர்த்து விஷால் போட்டியிடுவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சேரன் உள்ளிட்ட 25 பேர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விஷால் தரப்பினர் தங்களை மிரட்டுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கோரி ஆயிரம் விளக்கு போலீஸில் சேரன் மனு கொடுத்துள்ளார்.
மேலும் விஷால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.