For Daily Alerts
Just In
செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்- 3,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் | தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்?- வீடியோ
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க 3,000 ஏக்கர் விளைநிலம் ஆக்கிரமிப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதற்காக செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டாரங்களில் 5 கிராமங்களில் 3,000 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த விவசாயிகள், விளைநிலத்தை ஆக்கிரமிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
Comments
English summary
Cheyyur farmers protest against the land acquisition for second international airport.
Story first published: Friday, June 22, 2018, 17:15 [IST]