புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 4,047 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் எடப்பாடியார் கோரிக்கை!
புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 4,047 கோடி ரூபாய் தேவை என பிரிதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி: புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 4,047 கோடி ரூபாய் தேவை என பிரிதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கிய ஓகி புயல் அம்மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இந்நிலையில் ஓகி புயலால் பாதிப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு நடத்தி வருகிறார்.
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிடோர் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.
பாதிப்பு குறித்து..
கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடியை அவர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மோடி தலைமையில் கூட்டம்
ஓகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமரிடம் மனு
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் பாதிப்பு குறித்து விளக்கினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கவேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு அளித்தார்.
ரூ.4047 கோடி தேவை
ஓகி புயல் சூறையாடிய பகுதிகளின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 4,047 கோடி ரூபாய் பாதிப்பு நிவாரண நிதி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்திப்பார் என கூறப்படுகிறது.