For Daily Alerts
Just In
அங்க "சின்னம்மா" ஜெயில்ல வாடுறாங்க.. இங்க எடப்பாடி பேட்மிண்டன் ஆடிட்டிருக்கார் பாருங்க!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் சேர்ந்து இன்று பேட்மிண்டன் விளையாடினார்.
சென்னை:மேற்கு மாம்பளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள் விளையாட்டு அரங்கை இன்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்களுடன் அவர் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார்.
ஓபிஎஸ்க்கு பிறகு வந்துள்ள எடப்பாடி அரசு எப்படியாவது மக்கள் மனதில் நின்றுவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் சகிதமாக இன்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர்களுடன் அவர் பேட்மிண்டன் விளையாடினார். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உட்பட பல்வேறு எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
பேட்மிண்டன் விளையாடிய முதலமைச்சர் pic.twitter.com/M7z15pvFMn
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 24, 2017
Comments
English summary
Chief minister Edappadi palanisami played Badminton with ministers today. Edappadi palanisami opens indoor stadium in west mambalam.
Story first published: Saturday, June 24, 2017, 14:06 [IST]