காவிரி: மத்திய அரசின் மவுனம், தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள், மேலாண்மை வாரியத்தை அமைத்து நடைமுறைக்கு கொண்டுவர, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் கடிதம்
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அவர் விளக்கி கூறியுள்ளார்.
நடவடிக்கை இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு 4 வராம் ஆகியும், மத்திய அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்கள் வேதனை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்
நீர் முறைப்படுத்தும் குழு
மேலாண்மை வாரியம் அமைக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.