மறைந்த எம்.எல்.ஏ., போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் அஞ்சலி
மறைந்த எம்எல்ஏ போஸ் உடலுக்கு முதலமைச்சர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
மதுரை: மறைந்த எம்.எல்.ஏ., ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரில் போஸ் வசித்து வந்தார். உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் அவ்வப்போது முக்கிய கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
எனினும், நேற்று நள்ளிரவு தூக்கத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த போஸின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் 1 மணி அளவில் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தமிழக அமைச்சர்கள், எம்,எல்.ஏக்களும், போஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். அதை தொடர்ந்து மாலை ஏ.கே. போஸின் வீட்டில் 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த ஏ.கே. போஸிற்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.