ஏ.பி.பரதன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஏ.பி.பரதன் மறைந்தார் என்ற செய்திக் கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தேன். ஏ.பி.பரதன் தொழிலாளர்களுக்காகவும் ஏழை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவை ஆற்றியவர்.
அரசியல் வரலாற்றின் பல திருப்பமான கட்டங்களில் பேச்சு நட்த்தி பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்த ஆற்றல் பெற்றவர். அவருடன் பல மேடைகளில் நான் பங்கேற்றுள்ளேன். எனது இல்லத்திற்கும் அவர் பல முறை வருகை புரிந்துள்ளார். அரசியல் வரலாற்றில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.