நாமக்கல்லில் குழந்தைத் திருமணம்... 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய தாய் மாமன் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டைளை அருகே உள்ள கொங்களம்மன் கோவிலை சேர்ந்தவர் லாரி டிரைவர் மாது (32). இவரது அக்கா பரிமளா கணவனை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். பரிமளாவுக்கு 13 வயதில் பெண் குழந்தை
உள்ளது. தாய் பரிமளாவும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாட்டி மற்றும் தாய்மாமன் இருக்கும் வீட்டில் அந்த சிறுமி வசித்து வந்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாய்மாமனான மாது, 13-வயது சிறுமியுடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாககூறி, குடும்பம் நடத்தியுள்ளார்.
இதையறிந்த அரியாகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவல் சரவணன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் மாது, சிறுமியுடன் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மாதுவை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற மாதுவின் தாய் பார்வதியை தேடி வருகின்றனர்.