காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயிலில் கல்யாண உற்சவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சித்ரகுப்தன் கோயிலில் கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
உலகில் சித்ர குப்தருக்கு என தனி சன்னதி என்ற சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில்.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திற்கு முன்னாள் சித்திர குப்தருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் சித்ரகுப்தர் கோவிலில் சித்திரகுப்தர் கர்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதையொட்டி உற்சவருக்கு பட்டாடைகள் சாத்தப்பட்டு மாங்கல்யம் ச மர்ப்பித்து மேள தாளங்கள் முழங்க திரண்டிருந்த திரளான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, மஞ்சள் மற்றும் குங்கும பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்தர் 4 ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தனர்.