முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனு
முன்ஜாமீன் கேட்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: முன்ஜாமீன் கேட்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் அண்மையில் கடன் தொல்லையால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதையடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.
மேலும் அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்புச்செழியனை பிடிக்க புது முயற்சியாக அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.