மதுரை-சிங்கப்பூர் நடுவே ஏர் இந்தியா விமான சேவைக்கு ஒப்புதல்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து, மதுரை வழியாக சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவையை இயக்க, மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எடுத்துவந்த தொடர் முயற்சியின் பலனாக, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவும்(1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) July 31, 2017
மதுரை வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையும்மான #டெல்லி_மதுரை_சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஒப்புதலை (1/2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) July 31, 2017
மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும்,மத்திய உள்துறை அமைச்சர் திரு @rajnathsingh (3)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) July 31, 2017
எனது சார்பாகவும்,மதுரை மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.(4)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) July 31, 2017
மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எடுத்துவந்த தொடர் முயற்சியின் பலனாக, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவும், மதுரை வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையும்மான டெல்லி_மதுரை_சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஒப்புதலை மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு எனது சார்பாகவும், மதுரை மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.