For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை காங். தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சண்டை.. நல்ல வேளை உடையல மண்டை!
சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இளங்கோவன் ஆதரவாளர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
மோதலைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
Comments
congress clash partymen tamilnadu assembly election 2016 காங்கிரஸ் சென்னை மோதல் தமிழக சட்டசபைத் தேர்தல் 2016
English summary
The clash broke out between two groups of partymen in a meeting held in Chennai today.
Story first published: Sunday, March 20, 2016, 17:13 [IST]