For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுக அலுவலகம் முற்றுகை- ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர்

மதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை மதிமுகவினர் நையபுடைத்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக அலுவலகமான தாயகத்தை முற்றுகையிட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை மதிமுகவினர் நையபுடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்கள் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு அங்கு 1000 குடியிருப்புகளை கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Clash between MDMK cadres and Jayakumar supporters in Moolakothalam issue

இதற்கு மதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நேரில் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். எனினும் சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் போது மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்கும் அரசு சார்பி கட்டப்படும் கட்டடத்துக்கு 0.58 ஏக்கர் இடைவெளி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மதிமுக எதிர்ப்பு தெரிவித்து மூலகொத்தளம் சுடுகாட்டை அகற்ற வேண்டும் என்று கோரியும் மதிமுகவின் தலைமையகமான தாயகத்தை ஜெயக்குமார் ஆதரவாளர்கள் முற்றுகையிட வந்தனர். அப்போது வைகோ ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர் அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Clash between Vaiko supporters and Jayakumar supporters in Moolakothalam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X